"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Update: 2020-03-21 07:49 GMT
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள்ஒதுக்கீடு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நடைமுறையை கொண்டு வருவதற்காக அனைத்து புள்ளி விபரங்களையும் தொகுத்து வழங்கி பரிசீலிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்