சுகவனேஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவம் - கொரோனாவிலிருந்து மக்களை காக்க வழிபாடு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்துள்ள குடமங்கலம் சுகவனேஸ்வரர் கோயிலில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க வேண்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Update: 2020-03-21 02:37 GMT
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்துள்ள குடமங்கலம் சுகவனேஸ்வரர் கோயிலில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க வேண்டி, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின் நள்ளிரவில் ஆலய வளாகத்திற்கு உள்ளேயே மாலை மாற்றுதல் வைபவமும், பின்னர் மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்