"22 ஆம் தேதி பெட்ரோல் பங்குகள் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் இயங்கும்" - தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் அறிவிப்பு

பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-03-20 19:32 GMT
பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பெட்ரோலிய சேவை அத்தியாவசியமாக கருதப்படுவதால், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று, குறைந்த ஊழியர்களுடன் மட்டுமே பெட்ரோல் பங்குகள்  இயங்கும் என கூறியுள்ளது. ஊரடங்குக்கு ஆதரவாக, ஊழியர்கள் யாரும் பெட்ரோல் பங்க்கை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அந்த சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்