கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கேரளாவில் இருந்து அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2020-03-20 11:28 GMT
கேரளாவில் இருந்து அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டார். கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கும், அனைத்து வாகனம் தொடர்பு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்