கேரளாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞருக்கு காய்ச்சல் - கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

கேரளாவிற்கு சுற்றுலா சென்று அரக்கோணம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-03-12 21:18 GMT
கேரளாவிற்கு சுற்றுலா சென்று அரக்கோணம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  காய்ச்சல் காரணமாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்பே அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என தெரிய வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அச்சமடைந்தனர்
Tags:    

மேலும் செய்திகள்