அமைச்சருக்காக வெயிலில் காத்திருந்த பள்ளி மாணவர்கள்

திருவண்ணாமலை அருகே, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவிற்கு வருகை தந்த அமைச்சருக்காக, பள்ளி மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர்.

Update: 2020-02-25 21:02 GMT
திருவண்ணாமலை அருகே, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவிற்கு வருகை தந்த அமைச்சருக்காக, பள்ளி மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர்.  செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சியில்  ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில், அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அவர் காலை 10 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சரை வரவேற்பதற்காக நீண்ட வரிசையில் பள்ளி மாணவ மாணவிகளை காலில் காலணி கூட இல்லாமல்  காத்திருந்தனர்.  வெயிலின் தாக்கத்தால்,மாணவ மாணவிகள் அவதியடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்