டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.

Update: 2020-02-22 09:34 GMT
திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில், ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட்  நிலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு, தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக​ திருச்செந்தூருக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை  தினத்தந்தி நிர்வாக இயக்குநர் சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் பொன்னாடை போற்றி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். ​இந்த விழாவில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.



வெண்கல சிலையை திறந்து வைத்தார், எடப்பாடி பழனிசாமி

இதைத்தொடர்ந்து, மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

நூலகத்தை பார்வையிட்டார், முதலமைச்சர் பழனிசாமி

மணிமண்டபத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், மணிமண்டபத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்