பங்குச் சந்தை மூலம் லாபம் ஈட்டித் தருவதாக மோசடி - ரூ. 14 லட்சத்தை சுருட்டியது அம்பலம் -

திருவண்ணாமலை அருகே அதிக வருவாய் ஈட்டித் தருவதாக கூறி 14 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர்.

Update: 2020-02-12 10:16 GMT
திருவண்ணாமலை அருகே அதிக வருவாய் ஈட்டித் தருவதாக கூறி 14 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர். வேட்டவலம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி தமது கணவர் பங்குச் சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டித் தருவதாக அலுவலக தோழி மணிமேகலையிடம் கூறியுள்ளார். இதை நம்பிய மணிமேகலை, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதற்கு10 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்த நிலையில், உறவினர்களின் பணம் 14 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். நீண்ட நாட்களாகியும் பணம் கிடைக்காததால், சந்தேகம் அடைந்த அவர், ஜெயந்தி-பவுன்குமார் தம்பதி மீது புகார் அளித்தார். இருவரையும் கைது செய்த  போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்