2016 கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு : 2 கிராம நிர்வாக அலுவலர்கள் கைது

2016ஆம் ஆண்டின், கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக, 2 கிராம நிர்வாக அலுவலகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-02-11 07:46 GMT
2016ஆம் ஆண்டின், கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக, 2 கிராம நிர்வாக அலுவலகர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரை, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டின் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட, 2 கிராம நிர்வாக அலுவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்