கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய முகமூடி கொள்ளையன்
குடியாத்தம் அருகே முகமூடி அணிந்து கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியாத்தம் அருகே முகமூடி அணிந்து கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். உப்பரபள்ளி கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்ததால் சமீபத்தில் சிசிடிவி பொருத்துப்பட்டது. இந்நிலையில் கொள்ளையன் ஒருவன் முகமூடி அணிந்து வந்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.