பணிக்கு சென்று மாயமான சிஆர்பிஎப் வீரர் : கணவனை கண்டுபிடித்து தரகோரி மனைவி வழக்கு

சண்டிகரில், சி.ஆர்.பி.எப்.யில் பணிபுரியும், கணவனை கண்டுபிடித்து தர கோரி, தெய்வகனி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-05 22:06 GMT
சண்டிகரில், சி.ஆர்.பி.எப்.யில் பணிபுரியும், கணவனை கண்டுபிடித்து தர கோரி, தெய்வகனி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சி.ஆர்.பி.எப்யில் பணியாற்றி வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் விடுமுறை முடிந்து, கடந்தாண்டு ஜூன் 29 ஆம் தேதி, பணிக்கு திரும்பிய நிலையில், ஜூலை 1 ஆம் தேதி தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேசியுள்ளார். இதையடுத்து, ஜூலை 2 ஆம் டெல்லியில் இருந்து, தெய்வகனியை தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், தங்கள் கணவரது பொருள்கள் வந்துள்ளது, ஆனால் அவர் வரவில்லை என தகவல் கூறியுள்ளர். எனவே, தனது கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிடுமாறு தெய்வகனி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்