மின்சார துறையில் கேங்மென் பணி நியமன புகார் மனு : "லஞ்ச ஒழிப்புதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

மின்சார துறையில் கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-03 08:50 GMT
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், கேங்மேன் பணி நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் மனுவை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளதாக  தெரிவித்தார். இதையடுத்து,  மனுதாரரின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு, நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்