பேருந்து சேவையை தொடங்கி வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்

சிவகங்கை அருகே, புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், அதே பேருந்தில் பயணம் செய்தார்.

Update: 2020-01-19 21:22 GMT
சிவகங்கை அருகே, புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த கதர்துறை அமைச்சர் பாஸ்கரன்,  அதே பேருந்தில் பயணம் செய்தார்.  சிவகங்கையை அடுத்த, தமறாக்கி என்கிற கிராமத்தில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் வரை, புதிய வழித்தட சேவையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். அதே பேருந்தில் ஏறி, பயணச்சீட்டு பெற்று அருகில் உள்ள குமாரபட்டி கிராமம் வரை பயணம் மேற்கொண்டார். அந்த கிராமத்தினர் அமைச்சரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் பேருந்தில் இருந்து இறங்கி வருவதை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்