மதுவிற்பனை செய்வதில் கடும் மோதல் - 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சட்ட விரோத மதுவிற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சட்ட விரோத மதுவிற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஒரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நள்ளிரவில் டாஸ்மாக் பாரில் நடந்த அடிதடி ரகளை காரணமாக 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.