மதுவில் அமிலம் கலந்து கொடுத்து நண்பன் கொலை - 20 ஆண்டுகால நட்பை மறைத்த பதவி மோகம்

பரமத்திவேலூர் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்காக 20 ஆண்டுகால நண்பனையே மதுவில் அமிலம் கலந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-01-10 02:12 GMT
இருக்கூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிமுக பிரமுகர் செந்தில்குமாரும் திமுக பிரமுகரான ஆறுமுகமும் 20 ஆண்டுகால நண்பர்கள் என்று கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இவர்களின் மனைவி, கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதையடுத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியை தமது மனைவிக்கு விட்டுத் தரக்கோரி, செந்தில்குமாரிடம் ஆறுமுகம் கேட்டுள்ளார். இதற்கு செந்தில்குமார் மறுப்பு தெரிவிக்கவே, அவருக்கு மதுவில் அமிலம் கலந்து கொடுத்து ஆறுமுகம் அவரை கொலை செய்துள்ளார். இதற்கு சரவணன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே செந்தில்குமாருடன் மது விருந்தில் கலந்து கொண்ட தியாகராஜன் என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்