சென்னையில் வருகிற 23ஆம் தேதி பேரணி- திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னையில் வருகிற 23ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி நடத்துவது என திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-18 08:54 GMT
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக 2 முக்கிய தீர்மானங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வருகிற 23 ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்