பெயர் பலகைகளில் தமிழ் தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

பெயர்ப் பலகைகளில் தமிழ் தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-12-09 07:59 GMT
பெயர்ப் பலகைகளில் தமிழ்  தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் ஆட்சி மொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இம்மாதம் தமிழ் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிப்பதாகவும் அதில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்