மழை... சுவர் இடிந்து 17 பேர் பலி : உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்
கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியான 17 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏ.டி.காலனி பகுதியில் மாடி வீடு ஒன்றின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் உள்ள 4 வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு, 17 பேரின் உடல்களை வாங்க மறுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.