கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

கனமழைக்கு, மதுராந்தகத்தை அடுத்துள்ள தட்டாம்பேடு அரசினர் மேல்நிலை பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

Update: 2019-12-02 10:48 GMT
கனமழைக்கு, மதுராந்தகத்தை அடுத்துள்ள தட்டாம்பேடு அரசினர் மேல்நிலை பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத அந்த கட்டிடத்தில்தான் இது நாள் வரை  மாணவர்கள் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் உள்ள பயன்பாடற்ற பழைய கட்டிடங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்