ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

Update: 2019-10-22 14:02 GMT
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  பணப்பட்டுவாடா புகார்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. ஆணைய நடவடிக்கைகளை வாய்மொழியாக தெரிவிக்க விரும்பாததால் கவரில் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். இந்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரியதால், விசாரணையை அக்டோபர் 30ஆம்  தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்