மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டி : பதக்கங்களை வாரி குவித்த அருப்புக்கோட்டை மாணவர்கள்
மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில், அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பதக்கங்களை வாரி குவித்துள்ளனர்.
மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில், அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பதக்கங்களை வாரி குவித்துள்ளனர். மலேசியா, இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா என 10 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா சார்பில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இதில் அருப்புக்கோட்டையை சேர்ந்த 12 வீரர்களும் அடக்கம். அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் 17 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற உதவியுள்ளனர்.