ஆதிச்சநல்லூர், கீழடி, உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி - மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் ஆகிய இடங்களில் மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி, தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

Update: 2019-10-10 22:56 GMT
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் ஆகிய இடங்களில் மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி, தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து மத்திய கலாசாரத்துறை செயலாளர் மற்றும் மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குனர்கள் உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்