இன்று மாமல்லபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாமல்லபுரம் செல்கிறார்.

Update: 2019-10-02 02:47 GMT
பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாமல்லபுரம் செல்கிறார். அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறார். அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, சீன அதிகாரிகள் குழு மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மாமல்லபுரத்தில் பலமுறை ஆய்வு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்