அமராவதி அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-09-18 09:30 GMT
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார். வருகிற 20ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதன் மூலம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி ​பெறும் எனவும், அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்