புதுக்கோட்டை நகரில் உள்ள குளங்களை சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை நகரில் உள்ள குளங்களை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை நகரில் உள்ள குளங்களை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்து மாவட்டத்தின் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் பல்லவன் குளம், வேங்கப்பன் ஊரணி, ராஜகுலம் உள்ளிட்டவற்றில் குப்பை கூளங்கள் மண்டி, நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அவற்றை சுத்தம் செய்து, குளங்களில் நிரம்பியுள்ள நீரை பாதுகாக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.