மதுரை : ரயில் பெட்டிகள் மீது இன்ஜின் மோதி விபத்து - 12 பயணிகள் காயம்

மதுரை ரயில் நிலையத்தில், செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இன்ஜினை பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது.

Update: 2019-09-08 06:59 GMT
மதுரை ரயில் நிலையத்தில், செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இன்ஜினை பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த என்ஜின், ரயில் பெட்டிகள் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் 12 பயணிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த பயணிகள் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்ட மேலாளர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது.
Tags:    

மேலும் செய்திகள்