பழனி அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு

பழனி அருகே சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தனியார் பேருந்தை தீ வைத்து எரித்தனர்.

Update: 2019-09-04 20:37 GMT
பழனி அருகே சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழந்ததால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தனியார் பேருந்தை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம்,  திண்டுக்கல் - பழனி இடையே, சத்திரப்பட்டி என்ற இடத்தில் இன்றிரவு நிகழ்ந்தது. இங்குள்ள சிந்தவாடம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி துர்க்கைப்பனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக பேருந்து மோதி, உயிரிழந்தனர்.மோட்டார் சைக்கிளில் உடன் வந்த விஜயலட்சுமியின் தாயார் அங்கம்மாள் படுகாயங்களுடன் பழனி- அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்