நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டம் : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-08-27 18:08 GMT
தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 ஆண்டு இடைவெளிக்குப்பின், நடத்தப்படும் தேர்தலை 2 அல்லது 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும், விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்