திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

Update: 2019-08-20 11:35 GMT
மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திய ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் வந்த  போலீசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, சிறுவன் ஒருவன் பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுவனை பிடித்த போலீசார், பணத்தை மீட்டனர். கடந்த 18ம் தேதி நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்