அரசு மருத்துவமனையில் அழுகிய கால்களுடன் படுத்து கிடக்கும் நபர் - உற்றார் உறவினர் இன்றி பசியால் பரிதவிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரழிவு நோய் பாதிப்பு காரணமாக கால் அழுகிய நிலையில் கிடந்து வருவதாக கூறப்படுகிறது.

Update: 2019-08-18 18:24 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரழிவு நோய் பாதிப்பு காரணமாக கால் அழுகிய நிலையில் கிடந்து வருவதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர் ஆம்பூரை சேர்ந்த ஐயப்பன் என்பதும், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு காலுக்கு சிகிச்சை பெற வந்ததும் தெரியவந்தது. மேலும் குணப்படுத்திவிட்டு தான் வீட்டுக்கு வர  வேண்டும் என்று மனைவி தன்னை அனுப்பிவிட்டதாக கூறும் அவர், தாய் தந்தை, உறவினர்கள் என யாரும் துணைக்கு இன்றி பசியால் தவித்து வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்