பெரியகுளம் அருகே குப்பை கிடங்காக மாறிவரும் வராக நதி
பெரியகுளம் அருகே நகர்புறங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊழியர்களே வராகநதியில் கொட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நகர்புறங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊழியர்களே வராகநதியில் கொட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வராகநதியை குப்பை கிடங்காக மாற்றிவரும் நகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.