ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-23 19:29 GMT
ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா, தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த சட்டத் திருத்தின் மூலம் தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய தகவல் ஆணையம் தனது வலிமையை முற்றிலுமாக இழந்துவிடும் என டி.டி.வி. தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மாநிலங்களவையில் நிறைவேற்றவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்