சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இரவில் பலத்த மழை பெய்தது.

Update: 2019-07-22 02:02 GMT
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இரவில் பலத்த மழை பெய்தது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்