பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-20 14:00 GMT
ஜாலிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் தரண் இன்று காலை சைக்கிளில் பள்ளி சென்று கொண்டிருந்த போது, பேருந்து மோதியதில் கால்களை இழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீவட்டிப்பட்டியில் இருந்து  தருமபுரி மாவட்டம் பொம்மிடி செல்லும் சாலையில் தனியார் கல்லூரி பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்