சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2019-07-20 13:35 GMT
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில், புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் இந்த பாதையில் 3 பேர் காரில் சென்று கொண்டிருந்த போது புலி ஒன்று சாலையை கடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் புலியை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது பரவி வரும் நிலையில், வனத்துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்