வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Update: 2019-07-16 19:59 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.  சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற புள்ளிமான் ஒன்று, கோபிசெட்டிபாளையம் பகுதியிலுள்ள விவசாய தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கித்தவித்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற, வனத்துறையினர் காயமடைந்த புள்ளிமானை மீட்டனர். பின்னர் சத்தியமங்கலம் வனகால்நடை மையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில், மானின் பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து மானுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்