மதுராந்தகம் : இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் தம்பதி

மதுராந்தகம் அருகே விபத்தில் உறவினர்களை இழந்த தம்பதியினர், இலவசமாக ஆம்புலன்ஸ் வாகன சேவை வழங்கி வருவது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

Update: 2019-07-06 02:00 GMT
மதுராந்தகம் அருகே விபத்தில் உறவினர்களை இழந்த தம்பதியினர், இலவசமாக ஆம்புலன்ஸ் வாகன சேவை வழங்கி வருவது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. தொழுப்பேடு பகுதியில் நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த பெட்ரிசன் நாராயணன் என்பவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் இல்லாததால் தனது உறவினர்களை இழந்ததாக வருந்திய நாராயணன், கார்டியன் ஏஞ்சல்ஸ் எனும் அறக்கட்டளை மூலம், கடந்த 16 ஆண்டுகளாக அப்பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வந்தார். இந்நிலையில் பழைய வாகனம் பழுதடைந்ததால், 15 லட்சம் மதிப்பில் புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. இதனை காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்