"அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Update: 2019-06-26 12:48 GMT
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்