கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

Update: 2019-06-24 06:06 GMT
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின்  பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். நேற்றிரவு கோவிலில் புகுந்த மர்ம நபர்கள், கோவில் பூட்டை உடைத்து, பூஜை செய்து வைத்திருந்த பழத்தை சாப்பிட்டனர். பின்னர், 5 ஆண்டுகளாக திறக்கப்படாத உண்டியலில் இருந்த பணம் மற்றும் பீராவில் வைக்கப்பட்டிருந்த நகை ஆகியவற்றை கொள்ளையடித்தனர். காலையில் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்