தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

Update: 2019-06-24 06:01 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது. இந்த பகுதியில் மணல் திருட்டு என தகவல் கிடைத்ததை அடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு படி, கனிமங்கள் மற்றும் சுரங்கங்களின் உதவி இயக்குனர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் பொக்லைன் இயந்திரத்தை விட்டு விட்டு, லாரியுடன் தப்பி சென்றனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தை கைப்பற்றிய அதிகாரிகள், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.     

Tags:    

மேலும் செய்திகள்