இடிந்த வீட்டை அளவிட ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த தனசேகர் என்பவர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் இடிந்த வீட்டை அளப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக அதிகாரி கேட்டதால் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2019-06-20 21:49 GMT
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் இடிந்த வீட்டை அளப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக அதிகாரி கேட்டதால் ஒருவர் உயிரிழந்தார். வேப்பத்தூரில் வசித்த தனசேகரன் என்பவர்  தனது வீட்டை அளப்பதற்காக சர்வேயர் ஜெகதாம்பாள் என்பவரை அழைத்துள்ளார். அவர், வீட்டை அளக்க 10 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. தனசேகரன் தம்மிடமிருந்த பணத்தை கொடுத்தும், மேலும் பணம் கேட்டு சர்வேயர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனசேகரன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தனசேகரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்
Tags:    

மேலும் செய்திகள்