கடலில் மாயமான காசிமேடு மீனவர்கள் : தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆறுதல்

சென்னை காசிமேடு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று 7 பேர் மாயமான நிலையில் அவர்களின் உறவினர்களை சந்தித்து திமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கேபிபி சாமி ஆறுதல் கூறினார்.

Update: 2019-06-19 14:21 GMT
சென்னை காசிமேடு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று 7 பேர் மாயமான நிலையில் அவர்களின் உறவினர்களை சந்தித்து திமுக  முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கேபிபி சாமி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 4ஆம் தேதி காசிமேடு பகுதியில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மீனவர்களின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை

Tags:    

மேலும் செய்திகள்