சத்தியமங்கலத்தில் ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு பரிசு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-06-18 21:45 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பவானி ஆற்றுப்பாலம் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விளக்கி கூறினர். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் இலவசமாக டவல் வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்