கடலூரில் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகள் கொள்ளை

கடலூரில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2019-06-16 10:10 GMT
கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். கார் ஓட்டுனரான இவர் நேற்று பணிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்,  மனைவி திவ்யபாரதி மற்றும்  மகளை கட்டி போட்டு விட்டு பீரோவில் இருந்த 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த திவ்யபாரதி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்