புதுச்சேரி : கணவரின் கண்முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு - காண்போரை அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை வழிமறித்த 3 மர்ம நபர்கள், 12 சவரன் செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-15 17:54 GMT
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை வழிமறித்த 3 மர்ம நபர்கள், 12 சவரன் செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முல்லை நகரை சேர்ந்த விநாயகம் என்பவர் தனது மனைவி பிரேமா உடன் உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டின் அருகே வந்துகொண்டிருந்த போது இவர்களை வழிமறித்த 3 மர்ம நபர்கள், பிரேமா அணிந்திருந்த 12 சவரன் நகையை பறித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள், இவர்களை பிடிக்க முற்பட்ட போது அந்த மர்ம நபர்களை அவர்களை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். காண்போரை அதிர வைக்கும் இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்