நேருக்கு நேர் மோதிய பைக்குகள் - டிராக்டருக்கு அடியில் விழுந்த நொடி... கொடூரமாய் பலியான 4 உயிர்கள்

Update: 2024-05-02 12:47 GMT

நாகையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது ஷக்கீம், ஹரி, ஆகாஷ் ஆகிய மூவரும் பைக்கிலேயே, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்திற்கு புறப்பட்டனர். தரங்கம்பாடி வழியாக சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மற்றொரு பைக், எதிரே வந்த பைக் மீது மோதியது. நிலைதடுமாறி சாலையில் விழுந்தவர்கள் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த தரங்கம்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதர், பொறையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்