குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு - தினகரன்

குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-06-15 14:18 GMT
குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளாக நடந்த குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார். அதோடு, புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலும் வெளிப்படை தன்மையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்