திண்டுக்கல் : அச்சுறுத்திவந்த செல்போன் திருட்டு கும்பல் சிக்கியது

திண்டுக்கல் மாவட்டம் ந‌த்த‌த்தை அச்சுறுத்தி வந்த செல்போன் திருட்டு கும்பல் போலீசார் வசம் சிக்கியுள்ளது.

Update: 2019-06-11 12:19 GMT
ந‌த்த‌த்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், ஒத்தக்கடை பாலம் அருகே குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கரவாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்துச் சென்றுள்ளது. இது குறித்து சாணர்பட்டி போலீசாரிடம் குமார் புகார் அளித்துள்ளார். ந‌த்தம், சாணர்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து, செல்போன் திருட்டு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்த‌னர். இந்த நிலையில், ந‌த்தம் தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில், தலா 3 பேர் என 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து சுமார் 30 செல்போன்களையும், பறக்கும் கேமரா ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் விசாரித்த‌தில், செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து,  அஜய், சிவா, பெரியசாமி, அருள் முருகன், ஸ்டாலின் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்