பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து : ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பழைபேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2019-06-08 13:50 GMT
நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியில்  தனியாருக்கு சொந்தமான பழைபேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பழைய பேப்பர், பண்டல் போடும் எந்திரம் உள்பட 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்து குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்