"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை
கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், அவர்களுக்கு சம்பளம் வழங்காமல், அறையில் அடைத்து சித்ரவதை செய்வதோடு, சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி வருவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் மிக்கேலம்மாள் மனு அளித்துள்ளார். இருவரையும் மீட்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.